இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்
3
- இத்தகு பெருமைப் பாட்டிற்கும் திருக்குறள் என்னும் இந்நூலே, குறைவற நிற்கும் ஒரு நிறைவுணர்வு வெளிப்பாட்டுச் சான்றாகும் என்க.
- இத் தமிழியல் உறுதிப் பொருள்கள் மூன்றின் தெறிப்புகளும் தெரிவிப் புகளும் பழந்தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதும் பதியப்பெற்றுள்ளதைக் கீழ்வரும் எடுத்துக்காட்டுகள் உறுதி செய்கின்றன.
- இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
- அன்பொடு புணர்ந்த ஐந்திணை'
- - தொல் : 1038:1-2
- 'அந்நிலை மருங்கின் அறம்முத லாகிய
- மும்முதற் பொருட்கும் உரிய என்ப'
- - தொல் 136
- அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
- ஆற்றும் பெருமதின் செல்வம்
- - புறம் 28.15-16
- சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
- அறத்துவழிப் படுஉம் தோற்றம் போல
- - புறம் 31.1-2
- அறம் பொருள் இன்பம் என்றம் மூன்றின்
- - கலி: 141.3
- தோற்றம்சால் தொகுபொருள்'
- - கலி:17
- (தொகுபொருளாவன அறமும் பொருளும் இன்பமும் என்பர்
- உரையாசிரியர்)
- வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
- நடுவணது எய்த இருதலையும் எய்தும்
- — நாலடி 28