பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



67.போற்றி என் போலும் பொய்யர்

தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்
போற்றி நின் பாதம் போற்றி
நாதனே போற்றி போற்றி போற்றி
நின் கருணை வெள்ளப்
புது மதுப் புவனம் நீர் தீக்
காற்று இயமானன் வானம்
இரு சுடர்க் கடவுளானே
63

வள்ளல்-கைம்மாறு கருதாது உபகரிப்பவன். கருணை வெள்ளப் புதுமது-இதுவரையில் நுகர்ந்தறியாத கருணை வெள்ளமாகிய அமுதம்.

இப்பாடலில் இறைவனை வள்ளல் என்றும், அட்ட மூர்த்த வடிவாய் உள்ளான் என்றும் பேசுகிறார்.

திருஅண்டப் பகுதியின் 20 முதல் 26ஆம் அடிவரை உள்ள பகுதிக்கு விளக்கம் எழுதும்போது அட்ட மூர்த்தங்கள் இறைவடிவம் என்ற பழைய கருத்தை அடிகளார் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பஞ்சபூதங்கள், சூரியன், சந்திரன் என்பவற்றில் ஒவ்வொன்றுக்குமுள்ள தனித்தன்மையை எடுத்தோதி, அந்தத் தனித் தன்மையை அவற்றுக்குத் தந்தவனே சிவபெருமான்தான் என்று அடிகளார் கூறியுள்ளமையையும் விளக்கிக் காட்டி யுள்ளோம்.

அங்கு 'அமைத்தோன், வைத்தோன், செய்தோன்' முதலிய சொற்கள் அமைத்தல் முதலிய தொழில்களைச் செய்விக்கும் ஏவுதற் கர்த்தாவாக இறைவன் உள்ளான் என்பதை விளக்கின. இறைவன் இச்சா மாத்திரதில் எதனையும் செய்விப்பவன் ஆதலின் ஏவுதற் கர்த்தாவாக ஆயினன். அமைத்தோன் என்பதால் அமைப்பை ஏற்றுக் கொள்ளும் பொருள், அமைத்தலாகிய செயல், அதனைச் செய்யும் கர்த்தா என மூன்றாக விரிந்து நிற்றலின் அவனே அட்ட மூர்த்த வடிவம் என்று சொல்வது பொருந்தாமை புலப்படுகிறது.