பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


இப்பாடலில் அடிகளாரின் சுயசரிதத்தில் ஒரு பகுதி பேசப்பட்டுள்ளது. திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகு பொதுமக்கள் தத்தம் வளர்ச்சிக்கேற்ப அடிகளாரைப் பற்றிப் பேசினார்கள். -

ஒரு சிலர் சொக்கநாதனின் உண்மையான அடியவர் என்று பேசினார்கள். ஒரு சிலர் அடிகளார் நிட்டையில் இருக்கும்போது அவர்மேல் திருநீற்றைப் பூசிச்சென்றனர் போலும், இன்னும் சில மந்தமதிகள் அமைச்சர் பதவியைத் துறந்து ஆண்டி வேடம் மேற்கொண்டதை ஏசினார்கள் என்றவாறு.

87.

அடியேன் அல்லேன்கொல்லோ தான் எனை
    ஆட்கொண்டிலைகொல்லோ
அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன்
    தாள் சேர்ந்தார்
செடி சேர் உடலம் இது நீக்க மாட்டேன்
    எங்கள் சிவலோகா
கடியேன் உன்னைக் கண் ஆரக் காணும் -
    ஆறு காணேனே

83

செடி-முடைநாற்றம் : தும்பமுமாம். கடியேன்-கொடியவன்.

பெருமானே! நான் உனக்கு அடியன் அல்லனோ? நீ என்னை ஆட்கொண்டிலையோ? அப்படியிருந்தும் நின்னைப் பிரிந்து வாழும் நான், குற்றங்கள் நிறைந்த இவ்வுடம்பைப் போக்கிக் கொள்ளாமல் இருக்கின்றேன் என்கிறார்.

88.

காணும் ஆறு காணேன் உன்னை
   அந்நாள் கண்டேனும்
பாணே பேசி என்தன்னைப் படுத்தது
   என்ன பரஞ்சோதி
ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா
   செத்தே போயினேன்