இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
1903-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15-ஆம் நாள் !
திரு குமாரசாமி-திருமதி சிவகாமி தம்பதிக்கு ஒரு புனிதமிகு நந்நாள் ஆகும். ஆம்; அன்றுதான் காமராஜ் அவதாரம் செய்தார்-ஆம்; ‘அவதாரம்’ செய்தார்.
இந்நாள், பாரதத் திரு நாட்டினுக்கும் ஒரு பொற்புடைத் தவநாளே ஆகும்.
எண்ணிப் பார்க்கிறோம்:
1903ல் பிறந்தார்.
1919ல் காங்கிரஸில் சேர்ந்தார்.
1920ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு.
1922: சாத்தூர் வட்டக் காங்கிரஸ் மாநாட்டுக்கு வரவேற்புக் குழுச் செயலாளர்.
1923-ல் கொடிப் போராட்டத்துக்கு தொண்டர் தலைமை.
1927-ல் சென்னை மவுண்ட் ரோடில் இருந்த நீலன் துரையின் சிலையினை அகற்ற போராட்டம்.
1930-ல் உப்புச் சத்தியாக்கிரகத்தில் கைது; சிறைவாசம்.
1932-ல் சட்டமறுப்பு.
1933-ல் விருதுநகர் அஞ்சல் அகத்தில் குண்டு வீசியதாகக் குற்றச் சாட்டு; தண்டனை.