இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
#33 வன்னிய வீரன் நாடி வந்தோனை ஓடிவர வேற்றனள். காமப் பசியொடு வந்தோன், கணிகையின் பேரழகைக் கண்டு பெருமூச்சு விட்டான் தோளழகைக் கண்டு துடித்துப் பதைத்தான். நெருப்பினால் உருக்கிய நெய்யின் நிறத்தினாள் சிரிப்பினால் உருக்கிச் சிற்றின்ப இதழ்களால் கிளிமழலை செய்தனள் கீழ்மகள் செய்த சொல்வழி நின்றது. செவியே, அன்னவள் விழிவழி நின்றது வேந்தன் மணிமுகம்! பறந்து வந்தவன் பரத்தையே நோக்கிக் காதங் கமழ்ந்திடும் கருங்குழல் மாதே கடல்படு முத்தையும் காடுபடு பொருளையும் மலைபடு மனியையும் மதித்திடா துன்றன் உடல்படு பொருள்தொட ஒடோடி வந்தேன் அடப்பம்பூக் கிழிக்கும் அன்னமே உன்றன் கண்ணழகு நீலக் கடலுக்கு வருமோ? பொருந்தி வளரும் புருவத்தின் வளைவு,