75 இல்லாண் முல்லை என்று இவை பத்தும் கைக்கிளை பெருந்திணை என்ற இவை இரண்டும் என்க. ஆய்ந்த அகப்புறம் ஐயிரண்டும் ஆயுங்கால் காந்தள் கவிமடமா வேறுதல் - காமமிக் காய்ந்தவர் வள்ளி வெறியாட்டாம் - வாய்ந்த சுரநடை மாதர் வருத்தம் - சுரனுள் முதுபாலை தன்னை மொழியின் - மதுமலர்த்தார்க் காவலன் வீயக் கவன்ற ததுவாகும் பாசறை முல்லை தலைமகன் பாசறைக்கண் மாசறு மாதரை உள்ளுதல்; மாசற்ற இல்லவள் முல்லையும் அஃதேயாம்; சொல்லுங்கால் குற்றிசை கோல்வளை யாளைத் தலைமகன் முற்றத் துறந்த துறவாம்; குறுங்கலி முற்றத் துறந்த தலைமகன் முன்னின்று பொற்றொடி மாதர் பழிதூற்றாம் குற்றந்தீர் தாபதம் காதற் றலைமகனை நீங்கிய மேவரு மாதர் நிலையாகும்; மேவருசீர் நீர்க்கப்பட் டானை யுவந்த தலைமகன் பார்த்துறு உந் தன்மை யதுவாம் தபுதாரம்: பத்தும் அகத்தின் புறம் கைக்கிளை என்றா பெருந்திணை என்றாங் கத்திணை யிரண்டும் அகத்திணைப் புறனே இவை பன்னிருபடலம் அவற்றுள் கைக்கிளையாவது காட்சி முதலான கைவ காமம் என்னை? கைக்கிளை தானே காணுங் காலைக் கூட்டமில் கிளவிக் கைக்கிளை அகப்புறம் பெருந்திணைப் பொருளே பொருந்தக் கூறின் அறத்தின் இயன்ற அகத்தொடு புணராத் திறந்த தென்ப திறனறிந் தோரே நிலையா அன்பின் நீடா இன்பத் துலகமலை வெல்லாம் பெருந்திணை அகப்புறம் _iறாராகலின், s