இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மெய்ப்பாட்டியல் - நாற்பா உஉ தி து?
'அன்னாய் வாழிவேண் டன்னை நின் மகள்
பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு தனிபசந் தனளென வினவுதி' (அகம். 48)
என வும்,
இனியான், உண்ணலு முண் கேனன் வாழலும் வாழேன்' {கல. 3ே}
எனவும் வரும்.
6. பசலைபாய்த லென்பது, பசலைபரத்தல். அது,
"கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் தீம்பா னிலத்துக் காஅங்கு எனக்கு மாகா தென்னைக்கு முதவாது பசலை யுனி இயர் வேண்டுந்
திதலை யல்குலெம் மாமைக் கவினே' {குறுத் 27)
என வரும்.
7 உண்டியிற்குறைத லென்பது பசியடதிற்றலேயன்றிச் சிறிது உண்டி யூட்டியவழிப் பண்டுபோலாது கழியவுஞ் சிறி துண்டல், அது,
- தீம்பா லுட்டினும் வேம்பினுங் கைக்கும் வாரா யெனினு மார்வமொடு நோக்கும் நின்னிற் சிறந்ததொன் றிலளே யென்னினும் படாஅ ளென்னிதற் படலே'
என வரும்,
8. உடம்புதனி சுருங்க லென்பது, அவ்வுண்ணாமை உயிரில்
செல்லாது உடம்பிற் காட்டுதல் சிசி