புெ ப்ப்பாட்டியல் - நூற்பா உச 霹_乐筑
தொடரைப் பிரித்திரண்டாக்கி, மறைந்தவை யுரைத்தல் புறஞ் சோல்மாணாக்கிளவி எனும் வேறுபடும் இரண்டை இனைத்து ஒன்றாக்க்ப் பத்தெண்ணி, அமைவுகாட்டுவர். மறைந்தவை யுரைத்தல் தனி மெய்ப்பா டாதலானும், புறகுசொல்மானாக் கிளவிக்கு இவ்வடை வேண்டப்படாமையானும், அவ்விரண்டை யும் இணைத்தல் ஏலாமை அறிக. மேலும் புணர்த்துழி உண்மை யைப் பிரிப்பதால் போதரும் பொருட்.சிறப்பின் மையும், அது கு, த்திரக் கருத்தன்மையை வலியுறுத்தும். ஆதலின். இத்தொ. ரை நின்றாங்கே ஒரு தொடராக் கொண்டு, அதன் செம்பொரு ளுரைப்பதே சூத்திரக் கருத்தாதல் தெளிவாம்.
'அருள்மிகவுடைமை யாவது-முன் களவில் தலைவனருளை வேண்டிய தலைவி, கற்பில் தா னவனை அருளொடு பேனும்
பெற்றி.
"நெடிய திரண்ட தோள்வளை நெகிழ்த்த
கொடிய னாகிய குன்றுகெழு நாடன் வருவதோர் காலை இன்முகந் திரியாது கடவுட் கற்பின் அவனெதிர் பேணி மடவை மன்ற நீயெனக் கடவுபு துனியல், வாழி தோழி! சான்றோர் புகழு முன்னர் நாணுப பழியாங் கொல்பவோ கானுங் காலே’
(குறுந். 252)
எனும் டாட்டில், பழிக்குரிய தலைவன் தவறுரைப்பதும் இழுக் கென வெறுக்கும் தலைவியினருள் நயத்தற்குரியது. மனைத் தக்க மாண்புடைய மனைவி இயல்பு. தற்காத்துத் தற்கொண்டாற் பேணுதல் எனும் வள்ளுவர் கொள்கையு மில் வுண்மையை வலியுறுத்தும்.
'அன்புதொகநிற்ற'லாவது - கொழுநன்கொடுமை உளங் கொளாமல், அவன்பாற் காதல் குறையாதொழுகல்,
'-... ...... காதலர்
நல்கார் நயவா ராயினும் பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே."
(குறுந் 60)