இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தன் துன்பத்தைக் கூறினான். அப்போது ஒரு சிறுவன் வேகமாய் வெளியே சென்று தன் கையில் சிறிது நீரைக் கொண்டு வந்து கோவிந்தன் காதில் வார்த்தான் ; பிறகு தலையைச் சாய்க்கும்படி கூறினான். இவ் விதம் அவன் இருமுறை செய்தான். அப்போது கோவிந்தன் துன்பம் நீங்கியது. தூக்கமும் ஒழிந்தது. அந்த எறும்பு அவ்வகுப்பை விட்டு வேறு வகுப்புக்குச் சென்றது.
7
கோபாலன் அந்த வகுப்பிலேதான் வாசிக்கிறான். அவன் மிகவும் நல்ல சிறுவன் அல்லவா ? ஆதலால் அவனைப் பார்ப்பதற்கே அந்த எறும்பு அங்கே சென்றது. அப்போது அவன் கோதண்டனைப்போல் குறும்பு செய்து கொண்டும் இல்லை : கோவிந்தனைப்போல் தூங்கிக் கொண்டும் இல்லை. அவன் கண்கள் இரண்டும் ஆசிரியரையே பார்த்துக் கொண்டிருந்தன ; காதுகள்
16