20 - தல்ல சேனபதி
"எந்தப் பயல் இந்தக் காரியத்தைச் செய்தான்?' என்று குதித்தான். நவாபுக்குச் செய்தி போயிற்று.
"இந்தக் காரியத்தைத் துணிந்து செய்தவனை
உடனே என்முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்" என்று உத்தரவு பிறந்தது. -
மூலனூர்த் தொண்டைமான் தான் செய்த காரியத் திற்காக இரங்கவில்லை. தண்டனை கிடைக்குமே என்று அஞ்சவும் இல்லை. தலை மறைவாக இருக்கவும் அவனுக்கு விருப்பம் இல்லை. அவன் இதை வேண்டுமென்றே செய்திருக்கிருன். ஆதலால் மேல் விளைவுக்கும் அவன் ஆயத்தமாக இருந்தான்.
நவாபின் ஏவலர்கள் தொண்டைமான அழைத்துக் கொண்டு நவாபின் முன் நிறுத்தினர்கள். வீரன் நவாபுக்குப் பணிவுடன் ஒரு சலாம் போட்டு நின்றன். நவாபு அவனை ஏற இரங்கப் பார்த்தார். ஆள் வாட்ட சாட்டமாக இருந்தான். அவன் திண்ணிய தோள்களும் பரந்த மார்பும் அவருக்கு வியப்பை உண்டாக்கின.
- நீதானே கடாவின் காதை அறுத்தவன் ?” என்று கேட்டார்.
ੋ "ஆம்" என்ருன் தொண்டைமான்.
ஏன் அப்படிச் செய்தாய் ' என்று சினக் குறிப் புடன் கேட்டார் நவாப். . . ."
நான் சொல்வதைப் பொறுமையுடன் கேட்க வேண்டும். இரண்டு காரணங்கள் உண்டு. சொல்
லட்டுமா ? . . . . . . . . . . . . - -
சொல்! : , . . . . . . 'முதல். காரணம்: நrவாபு அவர்களைக் கான வேண்டும் என்று நான் இங்கே வந்து பல நாட்களாகக்