உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நல்ல சேனாபதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நல்ல சேனுபதி

புலவர்கள் வாணராயரைப் பார்ப்பதற்கு முன்பே பரிசு கிடைத்தது. அதனுல் அவர்கள் உளம் கனிந்து அந்தச் செல்வரைப் பாடினர்கள். தம்மிடம் வருபவர் வேண்டும் பொருளை இந்த முறையில் அறிந்து உதவு வது தமிழுலகுக்கே புதுமையாக இருந்தது ; இதை யாவரும் பாராட்டினர்கள். புலவர்களுக்கோ பல வகை யில் நலம் உண்டாயிற்று. வாணராயர் ஊரில் இல் லாமல் இருந்தாலும் அவரை நாடிச் சென்ற புலவர் களுடைய விருப்பம் நிறைவேறியது.

பிறருக்குக் கொடுப்பதில் பல பல நுட்பமான, முறைகள் உண்டு. குறிப்பறிந்து ஈதலும், புலவர் வந்து சென்ற பிறகு அவரை அறியாமல் பரிசுகளைத் தருவதும், அவர் ஒன்று கேட்டால் பன்மடங்கு வழங்குதலும் முதலிய பலவகையில் புரவலர்கள் தம் அன்பைக் காட்டி யிருக்கிருர்கள். ஆனால், புலவர்கள் நேரிலே தம் வேட் கையைச் சொல்வதற்கு நாணவேண்டிய அவசியம் இல்லாமல், நேரில் காணமுடியாமல் போயிற்றே என்று வருந்த இடம் இன்றி, வாணராயர் தம் வீட்டின் வாயிலில் கட்டியிருந்த ஒலையும் எழுத்தாணியும் செய்து விட்டன.

- பிறரால் ஓர் உபகாரம் வேண்டுகிறவர்கள், அந்த உபகாரியிடம் பணிவாக இருந்து அதனைப் பெறுவது உலக இயல்பு. இங்கேயோ, எனக்கு இது வேண்டும் என்று கட்டளை விடுப்பதுபோலப் புலவர்கள் தம் கருத் தைத் தெரிவிக்கலாம். பரிசு பெற்ற பிறகு உபகாரி யைக் கண்டு பேசி அளவளாவி விருந்து நுகர்ந்து தங்கலாம். - - - .

வாணராயர் கவிஞர்கள் அனுப்பும் ஒலையைக் கண்டு வெளியே வந்து அவர்களை வரவேற்றர். வேண்டியதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_சேனாபதி.pdf/41&oldid=584004" இலிருந்து மீள்விக்கப்பட்டது