86
அடக்கியும் உயர்த்தியும் பேசவேண்டும். மின்சார விளக்குகள் எங்கெங்கே பொருத்தப்பட்டிருக்கின்றன; எங்கே நின்றால் முழு வெளிச்சமும் தன் மேல் விழும்; மற்ற நடிகர்களை மறைக்காமல் எப்படி நிற்பது; என்பனவற்றையெல்லாம் நடிகன் நினைவில் வைக்க வேண்டும்.
நடிப்பின் நுணுக்கம்
பக்கத்திலே நிற்கும் நடிகன் பாடத்தை மறந்து விட்டுத் தவிக்க நேரலாம். நினைவாற்றலுள்ள பண்பட்ட நடிகன் அதையும் சபையோர் அறியாதபடி சமாளிக்க வேண்டும்.
ஒரு சமுதாய நாடகத்தில் நடிகன் சொல்லும் ஒரு வார்ததை, ஒரு அசைவு, கதைப் போக்கிற்கு இன்றியமையாததாக இருக்கலாம். அந்த நேரத்தில் சபையில் ஒரு குழந்தையின் அழுகையாலோ அல்லது ஒரு பெரிய மனிதர் எழுந்து போனதாலோ, வேறு காரணங்களாலோ சலசலப்பு ஏற்படலாம். இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் நடிகன் தனது திறமையால் எப்படியாவது சமாளித்துக் குழப்பம் அடங்கிய பின்பே அந்த வார்த்தைகளைச் சொல்ல முயல் வேண்டும். இல்லாவிடடால கதைப் போக்கைச் சபையோர் புரிந்துகொள்ள முடியாமற் போகும்.
பண்பட்ட நடிப்பின் தன்மை
ஒரு சிறிய யானைப் பொம்மை; மரத்தால் செய்யப்படடது. ஆனால், இப்போது மரம மறைந்து விட்டது; யானை தான் நமக்குத் தெரியும். அன்பர்