பக்கம்:நான்கு நண்பர்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 மானைத் தேடி காக்கை புறப்பட்டது. இங்கும் அங்கும் பறந்தது. கடைசியாக மானைக் கண்டு பிடித்துவிட்டது. ஆனால், பாவம், மான் ஒரு வலைக்குள் அகப்பட்டுக் கொண்டிருந்தது !

மான் பக்கத்திலே காக்கை போனது. “நண்பா, கவலைப்படாதே. நான் உடனே போய், நமது எலியைக் கூட்டிக்கொண்டு வருகிறேன். அது இந்த வலையை அறுத்து உன்னைக் காப்பாற்றிவிடும் ” என்றது.

உடனே, எலியும் ஆமையும் இருந்த இடத்திற்குக் காக்கை பறந்து சென்றது. தான் பார்த்ததைச் சொன்னது. அதைக் கேட்டதும், “ஆ அப்படியா? வா, உடனே போகலாம்” என்றது எலி.