பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீத் தலைச் சாத்தனார் 25 சாத்தனாகும் நன்மாறனும் நெடுஞ்செழியனுக்குப் பின்னர்ப் பாண்டி நாட்டை தன்மாறன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் சித்திர மாடம்" என்ற மாளிகையில் இறந் தமையின், சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன்’ r என வழங்கப்பட்டான். அவ்வேந்தன், தன்னைச் சேர்ந்தோர்க்கு மிக்க நன்மையும் பகைவர்க்கு மிக்க துன்பமும் புரிந்தவன்; சிறந்த குணங்களை அணிகலனாகக் கொண்டவன்; புலவர் பெருமக்க விடத்து நீங்காத அன்புடையவன். அவன் எவர் எதை விரும்பி வரினும், பெறுக! என்று சொல்லி, வரையாது கொடுக்கும் வள்ளற்றன்மை வாய்ந்து விளங்கினன். ஒருகால், நம் புலவர்-சாத்தனார் அப் பாண்டியர் பெருமகனிடம் சென்றிருந்தார். அது போது,அவன் அவரை உபசரித்து,நல்விருந்தளித்து, நகைமுகங்காட்டி, அவர் மனம் வெறுக்குமாறு பரிசில் பல நல்கினான். புலவர் பெருமகிழ்வு. கொண்டவராய் அவன் அருமை பெருமைகளைப் புகழ்ந்து, "ஆரந்தாழ்ந்த அழகு மிக்க மார்பினை யும் முழந்தாளிலே தோய்ந்த பெரிய கையினை யும் உடைய அழகுமிக்க வழுதி! நீ யாவர்க்கும் உவந்து அருளைப் பண்ணுவை. பெரும! நீ நின் பகை வர்க்கு எந்நாளும் சுடும் வெம்மை ஒழியாது. கடலிடத்தே கிளர்ந்தெழுகின்ற ஞாயிற்றை ஒப்பை எம்போல்வார்க்குத் திங்களை ஒபபை'