80 நாவுக்கசரர்
பின்றானும் முன்றானும் ஆனான் தன்னைப்
பித்தர்க்குப் பித்தனாய் கின்றான் தன்னை நன்றாங் கறிந்தவர்க்குத் தானே யாகி
நல்வினையும் தீவினையும் ஆனான் தன்னைச் சென்றோங்கி விண்ணளவும் தீயா னானை
திருப்புன்கூர் மேவிய சிவலோகனை கின்றாய கீடுர் நிலாவி னானை
தேனே னென்னேநான் கினையா வாறே. (2)
என்பது இப்பதிகத்தின் இரண்டாவது தாண்டகம்.
நீடுர் அண்ணலிடம் விடைபெற்றுக்கொண்டு குறுக்கை வீரட்டத்திற்கு வருகின்றார் வாகீசர் பெருமான். ‘ஆதியிற் பிரமனார்தாம்’ (4.49) என்ற முதற் குறிப்பினையுடைய திருநேரிசைப் பதிகத்தால் சேவிக்கின்றார்.
காப்பதோர் வில்லும் அம்பும்
கையதோர் இறைச்சி பாரம் தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத்
தூயவாய்க் கலசம் ஆட்டித் தீப்பெருங் கண்கள் செய்யக்
குருதிநீர் ஒழுகத் தன் கண் கோப்பதும் பற்றிக் கொண்ட
குறுக்கைவி ரட்டி னாரே. (7) என்பது இப்பதிகத்தின் ஏழாவது பாடல். நெடியமால் பிரம
னோடு’ (4,50) என்ற முதற் குறிப்பினையுடைய பதி கத்தில் இாண்டே (1,2) பாடல்கள் உள்ளன.
முனையடுவார் நாயனார் தொண்டு புரிந்த தலம். திருப்புன்கூருக்கும் நீடூருக்ரும் ஒரே பதிகம் பொதுவாக வுள்ளது கவனிக்கத் தக்கது. -
6. குறுக்கை வீரட்டம் நீடூரிலிருந்து 5 கல் தொலை விலுள்ளது. மன்மதனை எரித்த்வீரட்டம்.