பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 நிலையும் நினைப்பும் ஆட்சி செலுத்தினார்கள்; அவர்கள் ஆட்சியில் இப்பொழுது உள்ளதைப்போல தரித்திரம் தாண் டவ மாடிய தில்லை. தன மிகுதியால் தமிழர் பிறருக் குத் தானம் வழங்கினர். மொழி, கலை, நாகரிகம், பிற பிற நாடுகளில் இருந்ததைவிட சிறப்புற்றிருந்தன. ஒவ்வொருவரும் கட்டுமஸ்தான உடம்பைப் பெற் றிருந்தார்கள். அந்தச் செல்வம் நிறைந்த மகோன் னதகாலத்தில் உள்ள தமிழ்நாட்டின் நினைப்புக்கும், கலை, மொழி, நாகரிகம் பிற நாட்டுக்கு அடிமையாகி, செல்வம் சீரழிக்கப்பட்டு, மனிதர்கள் குகைக்குள் அடைபட்ட சிறுத்தையாகி, பேதா பேதத்தால் பிரிந்து ஒற்றுமையில்லாமல் வாழ வழியில்லாத நிலையில் இருக்கும் இக்கால நினைப்புக்கும் எவ் வளவோ வேறுபாடுகள் உண்டு. சங்க காலத்தி லுள்ள தமிழ் நாட்டின் நினைப்புக்கு இந்நாள் தமிழ் நாட்டின் நினைப்பு எவ்வளவோ தாழ்ந்திருக்கிறது. எனது வாதத்திற்குத் துணையாக அகநானூறு, புற நானூறு, குறுந்தொகை, பட்டினப்பாலை, தொல் காப்பியம் ஆகியவைகளைச் சாட்சிக் கழைக்கிறேன். இக்காலத்தில் உலவும் நாசத்தை விளைவிக்கும் நம்பிக்கைகளை அக்காலத்தில் காண முடியாது. தமிழர் எண்ணம் பிறருக்கு அடிமையாகாதிருந்த காலத்தில் எப்படிக் காண முடியும் ? அகநானூறு, புறநானூறுகளில் எந்தத் தமிழ்நாட்டு மன்னனாவது போருக்குக் கிளம்பும்பொழுது, படை கிளம்பும் முன் யாகம் செய்தான் என்றே, பரமசிவத்திடம் பாசுபதம் பெற்றன் என்றே எங்கேயாவது பாட லுண்டா? அல்லது படை கிளம்பி எதிரிகளுடன்