பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என்.அண்ணாத்துரை 31 உள் இந்த நாட்டில் போற்றவில்லையா? இது அடாது! ரேடியோவும், மின்சாரமும், டெலிபோனும், சினிமாவும் விஞ்ஞான சாதனங்களல்லவோ. அவைகள் இங்கு இல்லையா,. ஏராளமாக ளனவே." என்று கூறலாம். விஞ்ஞான சாதனங் களை நாம் பார்ப்பதற்கும் அனுபவிப்பதற்கும், மேல் நாட்டார் பார்ப்பதற்கும், அனுபவிப்பதற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு. மேலாகப் பார்த்தால் சில விஞ்ஞான சாதனங்களைக் கொண்ட நம் நாடும் விஞ்ஞானத்தில் முன்னேறி யிருப்பதாகக் தோன்றும். கூர்ந்து கவனித்தால்த் தான் நம் நாட்டில் எவ்வளவு தூரம் விஞ்ஞானம் போற்றப்படுகிறது என்பது தெரியும். ரேடியோ ஒரு விஞ்ஞான சாதனம். அறிவு முன்னேற்றத் தைக் குறிக்கும் கருவி, அதன் மூலம் இலண்டனில், கல்கத்தாவில், ரெங்கோனில், ருஷ்யாவில், டோக் கியோவில் என்னென்ன நடக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால் ஜனங்கள் திருத் தணி, திருப்பதி, திருவாரூர், சிதம்பரம் போன்ற திவ்ய க்ஷேத்திரங்களையும் ஆங்காங்கு நடக்கிற விழாக்களையும் பற்றித் தெரிந்துகொள்ளக் காட்டு கிற அளவுக்கு ஆசையை, ரேடியோவின் மூலம் லண்டன், கல்கத்தா, ரெங்கோன் ஆகியவைப் பற் காட்டமாட்டார்கள். றித் தெரிந்துகொள்வதில் ரேடியோ இருந்து என்ன பயன்? எந்த முற்போக் குக்காக, லட்சியத்திற்காக ரேடியோ கண்டுபிடிக் கப்பட்டதோ, அந்த முற்போக்கு லட்சியம் நம்மவ ரால் கடைபிடிக்கப்படவில்லை. ரேடியோ இருக் கட்டும் திடீரென்று மாலைநேரத்தில் ஆகாயத்தில்