பக்கம்:நிலையும் நினைப்பும், முதற்பதிப்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாத்துரை 37 பிரச்சனை தீர்ந்துவிட்டதாகக் கருதினார்களோ அந்த சமூகப் பிரச்சனை தீர்க்கப்படாததைக் காண்பார்கள். உதாரணமாக அண்ணாமலைப் பல்கலைக் கழ கத்திலிருந்து மாணவர்கள் சமூக சேவை செய் வதற்காக வடாற்காடு ஜில்லாவிலுள்ள ஒரு கிராமத் திற்குச் செல்லுகிறார்கள் என்று வைத்துக்கொள் வோம் மாணவர்கள் அவ்வூர் ஸ்டேஷனைவிட்டு இறங்கி கிராமத்திற்குள் நுழைவார்கள். நுழைந்த. மாணவர்கள் அங்குள்ள சில கிராமத்தார்களைப் பார்த்து "இவ்வூரில் என்ன விசேஷம்" என்று கேட்பார்கள். உடனே "எங்கள் ஊரில் வீடுகள் சுகாதார முறைப்படி கட்டப்படடிருக்கும். எங்கள் ஊரில் திருடர் பயமில்லை. எங்கள் ஊரிலுள்ள இளை ஞர்கள் பலசாலிகள், ஒரு ஆஸ்பத்திரி இருக்கிறது, ஒரு பள்ளிக்கூட மிருக்கிறது அதில் உள்ள உபாத் தியாயர் கெட்டிக்காரர். ஆண்டுக்கொருகடவை விளையாட்டுப் பந்தயம் நடத்துவோம். ஒரு பூங்கா இருக்கிறது. ஒரு கண்காட்சிசாலைகூட இருக் கிறது.".- இதுவல்ல பதில். 'அவர்கள் அளிக்கிற பதில் மனதிலே மகிழ்ச்சிக்குப் பதில் திகிலை உண் டாக்கும். அவர்கள் கூறுவார்கள்.' இந்த ஊரிலே விசேஷங்களா ஒன்று விசேஷமில்லை! ஆனால் அதோ இருக்குது பாருங்க அந்த சர்க்கார் சாவடி, அதிலே ராத்திரி சரியா 12 மணி 1 மணிக்கு பிசாசு ஒன்னு வரும், அதுகிட்ட அம்புட்டுகிட்டவங்க பிழைக்கமாட்டாங்க அதற்கு பேயிடம் நம்பிக்கை யிருந்தாலும், 'பிசாசாவது C மாணவர்கள்