பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொன்றை வேந்தன்
(ஔவையார்)
கடவுள் வாழ்த்து

கொன்றை வேந்தன் செல்வன் அடி இணை
என்றும் ஏத்தித் தொழுவோம், யாமே.

நூல்

அன்னையும் பிதாவும் முன் அறி தெய்வம்.1
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.2
இல்லறம் அல்லது நல் அறம் அன்று.3
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.4
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.5
ஊருடன் பகைக்கின், வேருடன் கெடும்.6
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.7
ஏவா மக்கள் மூவா மருந்து.8
ஐயம் புகினும், செய்வன செய்.9
ஒருவனைப் பற்றி, ஓர் அகத்து இரு.10
ஓதலின் நன்றே, வேதியர்க்கு ஒழுக்கம்.11
ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.12
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.13