பக்கம்:நூறாசிரியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

142


மாட்டுநற் சாவு - நம்மைத் தப்பாது மாட்டி இறப்பிக்கும் இனிய சாவு

வறுமைத் துன்பத்தினும் சாத்துன்பம் பெரிதாகத் தோன்றவில்லை என்பது மட்டுமின்றி, இனியதும் கூட என்று கூறுவான் வேண்டி நற்சாவு எனப் பாராட்டிப் பேசினான் என்க. இதனால் வறுமையின் கொடுமை நன்கு உணர்த்தப் பெற்றது.

ஏழ்மையுற்றவரின் வாழ்வுப் போராட்டத்தையும் அவர்தம் துயரச் சூழலையும் எடுத்துக் கூறுவதாகும் இப்பாடல்.

இது பொதுவியலென் திணையும் முதுகாஞ்சி யென் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/168&oldid=1221024" இலிருந்து மீள்விக்கப்பட்டது