பக்கம்:நூறாசிரியம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



31 எவன்கொல் அறிகும்

எவன்கொல் அறிகும் இறையவன் கிடக்கை!
கவண்முகத் துருவிய சிறுகல் போல
விசைப்பே அளவிடைப் பொழுதே! வினையே
நசையள வயினே; நலிதலும் மெலிதலும்
அதனுட் பட்ட அவைபொறி வழிய! 5
செவ்விதி னமையா ஐம்பொறி முனைப்பும்
எல்லையுள் வாங்கும் அறிவி னான!
இவைகொடு தெளிவே இறையவன் உண்மை!
அவன்றிறல் மேற்றே அண்டம்;
அவிழ்தலுங் குவிதலும் அரிதுமற் றறிவே! 10

பொழிப்பு:

இறைவனின் இருக்கையை எவரே அறிகுவர்? கல்லெறி கருவியின் முனையினின்று உருவிப்போகும் சிறுகல்லைப் போலும் வாழ்க்கையின் விசைப்பு ஒர் அளவுபட்ட சிறுபொழுதே அவ்விடைப் பொழுதில் செய்யப் பெறும் வினையோ, உள்ளத்தெழுந்த விருப்பத்தைப் பொறுத்தது. உடல், உள்ள நலிவுகளும் மெலிவுகளும் அவ்விருப்பத்தின் உள்ளடங்குவன. அந்நலிவும் மெலிவும் உள்ளடங்கிய விருப்பமும் வினையும் உடலின் ஐம்பொறிகளை வாயாகக் கொண்டன. ஒன்றுக்கொன்று மேலவும் தாழவுமாகச் செப்பமுற அமையாத அவ்வைம்பொறிகளும் தம்முள் முனைத்து நிற்பினும், அவற்றின் அறிதிறனோ ஒர் எல்லையுள் வாங்கும் அளவுடையது. இயல்வனவும் இயலாதனவுமாகிய இவற்றைக் கொண்டுதான் இறைவனின் உண்மை தெளியப்பெறுதல் வேண்டும். அத்தகு இறைவனின் ஒளியின் மேலும் வலியின் மேலும் அளாவி நிற்பவைதாம் இவ்வுலக உருண்டையும் இது போல் பிறவும். அவற்றின் மலர்ச்சியாகிய தோற்றத்தையும், கூம்புதலாகிய ஒடுக்கத்தையும் அறிவது அரியது ; இயலாதது.

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

அகச்செருக்கும் அறிவுச் செருக்கும் வினைச்செருக்கும் மிகுந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/172&oldid=1220647" இலிருந்து மீள்விக்கப்பட்டது