பக்கம்:நூறாசிரியம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

175

வன்பால் வகுத்த அன்புறு வாழ்வை: வலிய ஊழாகிய இயற்கை இன்னார்க்கு இன்னவர் என்று வகுத்துக் கொடுத்த, அன்பு மேவிய வாழ்க்கையை,

யாமும் அறிகிலம்- மணந்து கொள்ளப் புகுந்த யாங்களும் கூட அறிந்திலம்.

யாங்கிதன் வலியே - இதன் வலிமைதான் என்னே!

தங்களின் பெற்றோரும் நண்பரும் தாமும் கூட உறுதியாய், இங்கண் நிகழும் என்று அறியாவிடத்து, தானே வந்து எம்மை மணவினைக்கு உடன்படுத்திய இவ்வியற்கைப் பிணைப்பின் வலிமைதான் என்னே என்று தலைவன், தலைவியை முன்வைத்துத் தோழியிடத்துக் கூறினான் என்க.

இது, முல்லைத் திணையும், கற்புக்காலத்துத் தலைவன் தலைவிமுன் மகிழ்ந்து சொல்லியது என்னும் துறையும் ஆகும்.

 .
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/201&oldid=1208911" இலிருந்து மீள்விக்கப்பட்டது