பாவலரேறு பெருஞ்சித்திரனார்
335
மேற்கண்டாங்கு நெறியுற வாழாமல் உணவு தேடுதலையே பெரும்பாடாய்க் கொண்டமையின் உண்டலுக்கு என்றார். உணவுகொள்ளுதல் தேவையே எனினும் அதன் பொருட்டுப் பொய்யுங் கரவடமுங் கொண்டு போலிமையாய் உறவாடல் வியப்புக்குரிய தாயிற்று.
‘பொய்மையும் வாய்மையிடத்த’ என்பவாகலின் வாளா கூறாது துறையின்றி என்றார்.
துறை- முறையான வழி.
பொய்யை மெய்போலக் கூறுதலின் பொய்யுரைத்து என்னாது பொய்யுரை குயிற்றி என்றார்.
'குயிற்றுதல்-இன்குரலிற் சொல்லுதல்.
உறவு தழீஇ-உறவினரோடு கூடிக் குலாவி
ஓடுநீர் உருட்ட ..... பெருங்கல் போல : ஓடுகின்ற யாற்று நீரால் உருட்டப்பட்டு வடிவம் சிறுத்து மறைந்தொழியும் உயர்ந்துநின்ற பெருங்கல் போல
யாவருங் காணுமாறு உயர்ந்து நின்ற பெருங்கல் யாற்றுநீர் விசையால் உருட்டிச் செல்லப்பெற்று உருட்டைக் கல்லாகவும், பரலாகவும், மணலாகவும், அயிராகவும் படிப்படியே வடிவஞ் சிறுத்துக் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தொழிதல் போல், வாழ்வாங்கு வாழ்ந்து புகழ் நிறுவ வேண்டிய பெருமைசால் மாந்தன் நெறிவயிற் செல்லாது வயிறு வளர்த்தல் பொருட்டுச் சிறுமையுற்று அலைந்து செயலிழந்து இறந்தொழிதலை விளக்குதற்கு இவ்வுமை கூறப்பட்டது.
பிழையிலாது உள்ளமும் -பேணலர்
தவறுபடாது உள்ளத்தையும் போற்றிக் கொள்ளாதவராய், உடலையும் போற்றிக் கொள்ளாதவராய்,
உள்ளத்தைத் தவறுபடாமல் போற்றிக் கொள்ளலாவது, பொறாமை பேராசை முதலானவற்றுக்கு இடங் கொடாமையும், உடலைத் தவறுபடாமல் போற்றிக் கொள்ளுதலாவது மாறுபாடான உண்டியும் அளவின் மீறிய உண்டியும் கொள்ளுதலும் உண்டி கொள்ளாமலேயே தவிர்த்தலும் நோய்க்கு இடங்கொடுத்தலும் பிறிவுமாம். மாந்தப் பிறவிக்குச் சிறந்ததாகலின் உள்ளத்தைப் போற்றாமையை இடித்துரைத்தார். உள்ளத்தைப் பேனாதொழிதலோடு உயிர்வாழ்க்கைக்கு இடனான உடலைத் தானும் பேனாமை வியப்புக்குரிய தாயிற்று.
வளம்பேணுதல்-போற்றிக் காத்தல்