பக்கம்:நூறாசிரியம்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

365


வானக்கோளைப் பற்றுதலும் மழைமுகிலைப் பொழிவித்தலும் கதிரவன் இயல்பை மாற்றுதலும் மலைவிடரைத் துர்த்துயர்த்திக் கொடுமுடியாக்கலும் மூச்சுக்காற்றைத் தேக்கித் தாம் விரும்பியாங்கு நீட்டித்தலும் ஆகிய அரிய வினைகளைச் செய்யும் பேராற்றல் வாய்ந்த வராயினும் இவ்வுலகில் பிறந்தவரெல்லாம் இறத்தல் உறுதியாம். உடலில் கண்ணும் செவியும் மூக்கும் உள்ளமட்டும் காட்சியும் கேள்வியும் முகர்ச்சியும் உண்டு. ஆகவே யாம் வயிற்றுப்பசி தணிக்கும் எளிய முறையில் ஈடுபடேம். உள்ளத்ததான மெய்யறிவு நாட்டமுடையேம் என்று எடுத்துரைப்பது இப்பாட்டு

வளிநிலம் துறந்து விண் கோள் வெளவி - காற்று இயங்கும் இந்த நில மண்டலத்தைவிட்டு மேலேறி வானக்கோளைப் பற்றி.

இந்நிலவுருண்டையின் மேல் குறிப்பிட்ட எல்லையளவே காற்று மண்டலம் உள்ளதென்றும் அதற்கப்பால் காற்றுமற்ற வெற்றிடமேயாம் என்றும் அறியப்படுதலின் வளிநிலம் எனப்பெற்றது.

'வளிவழங்கும் மல்லன் மாஞாலம் 'என்றார் திருவள்ளுவரும்.

வளி-காற்று. வெளவி-பற்றி.

அளிமழை பொழித்து - குளிர்ச்சி பொருந்திய கார் முகிலை மழை பொழியச் செய்து.

அளி-குளிர்ச்சி. பொழித்து-பொழிவித்து.

கருமுழை திரளா உருவகை தோற்றி - இருளடர்ந்த மலைவிடரைத் துர்த்து கற்றிரளாக அதன் வடிவத்தை வகை மாற்றித் தோற்றுவித்து.

முழு-விடர்.

அரும் உயிர்நிலைப்பை அவர் அவாநீட்டும் திறத்தோர் ஆயினும் -உள்ளிழுத்து நிறுத்தப்பட்ட மூச்சுக் காற்றின் இருப்பை தாம் விரும்பியாடங்கு நீட்டிக்கும் ஆற்றல் வாய்ந்தவராயினும்,

பிறத்தோர் எல்லாம் இறத்தால் மாறா - பிறந்தவரெல்லோரும் சாவதில் மாற்றமுறார்.

இருக்கும் ஞான்றையும் - விழுங்காலத்தும். ஞான்றை-காலம்.

கண்புலன் உள்காட்சியும் உளதால் - கண்ணாகிய புலன் உள்ளவிடத்துக் காணப்படுங் காட்சியும் உண்டு.

ஆல்-அசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/391&oldid=1209678" இலிருந்து மீள்விக்கப்பட்டது