சு. சமுத்திரம்
2௦9
சுற்றிக் கொண்டிருந்தார். கலாவதி எய்யோவ் யோ... யோ...’ என்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்தாள்.
திடீரென்று பூமிநாதனை மறைத்தபடி, தமிழரசி இடுப்பில் கை வைத்தபடி, அவனை இளக்காரமாகப் பார்ப்பது போல் தோன்றியது. உடனே ஊருக்குப் போவதற்கு முன்பாக, அண்ணன் சொன்ன ஆலோசனையும் நினைவுக்கு வந்தது. வெற்றியுடன் புறப்பட்ட அண்ணன் காரர், ‘எதுக்கும் மெட்ராசிக்குப் போய், தமிழரசியையும் கொஞ்சம் கைக்குள்ள போட்டுக்கோ. அவள் விஷயம் தெரிஞ்சு...ரகளை பண்ணாமல் பார்த்துக்கணும். இல்லன்னா, நம்ம எல்லாருக்கும் ஆபத்து’ என்றார்.
உடனே தாமோதரன், ஊர் உலகத்துல, குறிப்பாய் ஆபீஸ்கள்ல காரியத்தை முடிக்கிறதுக்காக, பொம்பிளைய கூட்டிக் கொடுப்பார்கள். நீ ஆம்புளய கூட்டிக் கொடுக்க பார்க்கிறியாக்கும்’ என்றான் சூடாக. அண்ணனை அப்படிக் கேட்டதற்காக, இப்போது கூட, அவன் வருத்தப்பட வில்லை. எதற்காக வருந்த வேண்டும்?
கொலைகாரர்களை விட, கொடியவர்களாய் நடந்து கொண்டவர்கள், விடுதலையாகி, ஊரில் கோவில் மாடு மாதிரி சுற்றித் திரிகிறார்கள். சூடுபட்ட கலாவதியோ, அய்யா விழுந்த கிணற்றை எட்டி எட்டிப் பார்த்தபடியே ‘எய்யோ...வ்...’ என்று கூப்பிடுகிறாளாம். அப்பாவைத் தேடுகிற சாக்கில், அவரைப்போல் போன நீதி தேவனைத் தேடுகிறாளோ? மனிதன் கிணற்றுக்குள் விழுந்தால் சடலமாவது நீரில் மிதக்கும். ஆனால் நியாயம் விழுந்தால்? இதற்கெல்லாம் காரணம் யார்? யாரோ, எவரோ? ஆனால் இதன் கிளைமாக்சை முடித்தவன் நான். இதனால் வாழ்க்கையில் எந்த கிளைமாக்சும் இல்லாமல் போய் விட்டேன்.
தாமோதரன் தனக்குள்ளே முனங்கிக் கொண்டான் அவனுக்குத் தேவைப்படுவது தமிழரசி கூட இல்லை.
நெ. 14