பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7


இவர்களினின்றும் முற்றிலும் மாறு பட்டவனாக அழகப்பன் விளங்கினான்.

அவன் அந்தக் கிராமத்திற்கு வந்து ஆறு ஏழு மாதங்கள் தான் ஆகின்றன. அதற்குள்ளாகவே அவனுக்கு அந்தக் கிராமத்து சூழ்நிலை அலுத்து விட்டது.

அழகப்பனுடைய அப்பா சென்னையில் ஆயுள் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒன்றில் குமாஸ்தாவாக இருந்தார். பெற்றோருக்கு அழகப்பன் ஒரே மகன். மிகவும் செல்லமாக வளர்த்த தன் மகனை, உயர்ந்த் படிப்பெல்லாம் படிக்க வைத்து: பெரிய ஆபீசராக ஆக்கிப் பார்க்க வேண்டும் என்பது அழகப்பனின் தந்தையின் மிகப் பெரிய ஆசை.

ஆங்கிலம் பள்ளியில் சேர்த்துப் படிக்க் வைத் தார் அழகப்பனும்-எல். கே. ஜி. யு. கே ஜி என்று படிப்படியாக ஐந்தாவது படிவம் - வரை-ஒரு வகுப்பிலும் தோற்காமல் நன்றாகவே படித்து வகது பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.

இந்த சமயத்தில் அழகப்பனுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய சோதனை ஒன்று நிகழ்ந்தது.

உறவினர் ஒருவரது வீட்டிற்குச் சென்று விட்டுத் திரும்பும் வழியில் ஒரு விபத்திற்குள்ளாகி அழகப்பனின் தாயும் தந்தையும் அதே இடத்தில் இறந்து விட்டனர்.