பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

திண்மையாக வளர்ந்து வந்திருக்கின்றன என்று அறிகிறோம். 54

என்கிறார் அறிஞர் நடன காசிநாதன்.

புதிய கற்காலம் முதலே கட்டடக் கலை தொடங்கி விட்டது. இயற்கையாக அமைந்த பாறையிடுக்குகளிலே குகைகளில் வாழ்ந்த மக்கள், மலைச் சரிவுகளிலே வட்ட வடிவில் அமைந்த குடிசைகளில் (புல்வேய் குரம்பை) வாழத் தொடங்கிய கால முதல் புதிய கற்காலம் வந்து விட்டது.

புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய கோடரி முதலிய கருவிகளே இதற்குச் சான்று. புதிய கற்கால முதலே தமிழகத்தில் கட்டடக்கலையின் வளர்ச்சி தொடங்கி யிருப்பதை அறிய முடிகிறது.

இப்படி வளரத் தொடங்கிய கலை சங்க காலத்தில் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும். கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை சங்க காலம் நிலவியிருக்கலாம் என்று வரலாற்றறிஞர்கள் கருதுகின்றனர்.

அந்தக் காலத்தில் இறைவர்தம் கோயில்களும் அரசர் தம் அரண்மனைகளும் சமுதாயத்தட்டில் உயர் நிலையில் இருந்தவர்களுக்கு மாட மாளிகைகளும் அமைக்கப்பட்டு இருந்ததற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியங்களிலே நிரம்பக் கிடைக்கின்றன.55

கட்டடக்கலை தொடர்பான பின்வரும் சொற்களும், தொடர்களும் பழந்தமிழ் நூல்களில் காணக் கிடைக்கின்றன.

1. சுடுமண் (செங்கல்), 2. சுதை (சுண்ணாம்பு), 3. விட்டம் (உத்தரம், நிலை முதலியன). 4. மாடம், 5. சாலகம் (பலகணி-சன்னல்), 6. காலதர் (பலகணி. -சன்னல்), 7. வேதிகை (திண்ணை), 8. தெற்றி