நா. பார்த்தசாரதி
145
1. கிராமம், 2. கேடம், 3. கர்வடம், 4. துர்க்கம், 5. நகரம்14 இந்த வரிசை முறை வளர்ச்சியில் நிறைந்த நிலையாகக் காணப்படும் நகரம் என்பது ஊரமைப்புக் கலையின் உள்ளது சிறத்தலாகப் (Evolution) படிப்படியாய் வளர்ந்திருக்கிறது எனக் கொள்ள வேண்டும். 'கிராமம்’ என்ற எல்லையில் ஊரமைப்பாகத் தோன்றிய கலை வளர்ச்சியின் நிறைவை, நகரமைப்பு என்ற உச்ச நிலையில் பெற்றுச் சிறந்திருக்கிறது.
மக்கள் தொகையும், நாகரிகமும், வாழ்க்கை வசதிகளும், வாணிகமும், சாலைகளும் பெருகப் பெருக நகரங்கள் ப்ல்கி வளர்ந்து வந்திருக்கின்றன.
இனிக் கிராமங்கள் எப்படி அமைக்கப்பட்டன. ஊரமைப்புத்திறன் எவ்வாறு படிப்படியாய் வளர்ந்து மேம்பாடுற்றது என்பனவற்றைக் காணலாம்.
கிராமங்களின் வடிவங்கள் (Blue Print) பழைய சிற்ப நூல்களில் விவரமாக விளக்கிக் கூறப்படுகின்றன.
அவ்வடிவங்களாவன:
1. தண்டகம், 2. சுவஸ்திகம், 3. பிரஸ்தரம், 4. பிரகீர்ணம், 5. நந்தியாவர்த்தம், 6. பராகம், 7. பத்மம், 8. ஸ்ரீபிரதிஷ்டிதம்
இப்பெயர்களும், பகுப்புகளும், ஊரில் அமையும் வீதிகளின் எண்ணிக்கை, போக்கு இவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தன.
தண்டகம்
ஊரின் வீதிகள் ஒரு தண்டத்தைப் போல (நீளக்கோல் போல) நீண்டு கிழக்கு முகமாகவாவது, வடக்கு முகமாகவாவது சென்று அச்சாலையின் நடுவில் நான்கு சந்துகள் இருப்பின் அக்கிராமம தண்டகம் என்று அழைக்கப்படும்.