174
பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்
ஒட்டிப் பல வீதிகள் பண்டசாலைகளாகவும், கிடங்கு களாகவும் அமையும்.
''காவிரிப்பூம்பட்டின நகரமைப்பிலும் பண்ட சாலைகள் முதன்மை பெற்றிருந்தன. 78
பண்டசாலைகளைக் காப்பவர்களின் சிறப்பைப் பற்றிக் கூடிய பின் பண்டங்கள் எவ்வாறு குவிந்து கிடக்கின்றன என்பதையும் கூறுகிறார் உருத்திரங்கண்ணனார்.
அந்நிய நாடுகளில் இருந்து பல பண்டங்கள் கப்பல் வழியாக வந்து பூம்புகாரில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்நிய நாடுகளில் கொண்டுபோய் இறக்குவதற்காகவும் பல பண்டங்கள் புகாரிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வெளியே அனுப்புவதற்காகக் குவிந்து கிடக்கும் பண்டங்களின் மீது சோழப் பேரரசின் சின்னமாகிய புலி இலச்சினை பொறிக்கப்பட்டுக் கிடக்கின்றன. 79
முத்திரை இடப்பட்ட பண்டங்கள்தாம் வெளியேற முடியும். முத்திரை இடப்படாத பண்டங்கள் ஏற்றுமதியாக வெளியேற முடியா. ஏற்றுமதி இறக்குமதிக்குக் கட்டுக் காவல்களும் சுங்கமும் இருந்தன.
இவ்வாறு நகரமைப்பில் துறைமுகப்பகுதியை ஒட்டிப் பல்வேறு பண்டசாலைகள் இருந்தமை தெரிகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காவிரிப்பூம்பட்டினம் ஒரு பெரிய வாணிக நகரமாக விளங்கியதென் பதும் 80 அதற்கேற்ற முறையிலே அக்கோ நகரம் அமைக்கப்பட்டிருந்தது என்பதும் நூற்சான்றுகளிலிருந்து தெரியவருகின்றன.
“கடைத் தெருவுக்கு ஆவணம் என்று ஒரு பெயர். அங்காடி என்பது மற்றொருபெயர். பண்டசாலை என்பது பண்டங்களைச் சேமித்து வைத்திருக்கும் இடம். இதை