உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


1. ஆணி, 2. புரட்டாசி, 3. மார்கழி, 4. பங்குனி.

இம்மாதங்களில் கட்டி முடித்த வீடுகளில் குடி புகவும் கூடாது என மனைநூல் தடுக்கிறது. ஆகாத மாதங்களில் முயன்றால் பகையும், துன்பமும் உண்டாவதோடு குடி புகுந்தாலும் பிணி, பீடை நலக் குறைவுகள் நேரும் என்று சொல்லப்படுகிறது. கட்டடக் கலையின் அதிதேவதையாகிய வாஸ்து புருடனின் நிலையறிந்து கட்டுவோன் நாள்கோள் மீன் முதலியன சரிபார்த்து மனைகோல வேண்டும் என்பதை மிக விரிவாக மனைநூல் கூறும்.

மனையடி நீள அகலம்

கட்டடம் கட்டும் மனையில் கட்டப்படும் நீள அகல அடியளவை வைத்து நன்மை தீமைகளைக் கூறுவதால் தான் இவ்வகை நூல்களுக்கு 'மனையடி சாஸ்திரம்’ என்ற பெயரே வந்தது. 45 தவிர அடிகொள்ளல் - தொடங்கல் என்றும் அடிகோலுதல் - அஸ்திவாரம் போடுதல் என்றும் பொருள்படுவனவாகும். 46

புதிதாகக் கட்டப்படும் வீட்டின் அறைகள், கூடங்கள், தாழ்வாரம் (சறுக்கார்) வாசல்கள் போன்றவற்றிக்கு உரிய நீள அகலங்களின் நன்மை தீமைகள் பற்றி விளக்கப்படுகிறது. அடி என்பது முன்னாளில் காலடி அளவும்-இந்நாளில் அடி அளவுமாகக் கொள்ளலாம். மேற்கூறிய அனைத்துப் பகுதிகளின் நீள அகலத்துக்கும் இப்பலன்கள் பொருந்தும். மனையில் கட்டடம் கட்டு வோர் தங்கள் நன்மைக்கேற்ப அளவுகளைத் தேர்ந்து கொள்ளவேண்டும்.47 விஞ்ஞான அறிவு வளர்ந்துள்ள இந் நாளிலும் மரபில் நம்பிக்கையுள்ள தமிழ் மக்கள் அந்த அடிமுறை நம்பிக்கைகளைக் கைவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே அடி முறை நம்பிக்கையான வேறொரு வகையில் கணித்துப் பார்ப்பதும் உண்டு. யார் மனையில் வீடு