பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

81


வீட்டின் உள்பகுதியில் 1,5,9 ஆகிய ஏதேனும் ஓர் எண்ணிக்கைப்படி அறைகள் இருப்பது நல்லது.3,7, 11 என்ற எண்ணிக்கையில் அறைகள் இருப்பது மத்திமப் பலனையே தரும். 2, 4, 6, 8, 10, 12, 14, 16 ஆகிய எண்ணிக்கையில் அறைகள் அமைவது அநுகூலமில்லை. 1, 3, 5, 7, 9, 11 எண்ணிக்கையில் இருப்பது ஏற்றம்.

வீடு, கேணி குத்தல், சந்து குத்தல், கோடிக்குத்தல், கட்டைக் குத்தல் என்பது நேர் எதிரே இருப்பது.

மேலே கூறிய இவற்றில் பல நம்பிக்கைகளாக மட்டும் கட்டடம் தொடர்பான நம்பிக்கைகளாதலின் இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மிகப் பல விரிவான சோதிட விவரங்கள் ஆய்வுக்கு அவசியமின்மைக் கருதி விடப்பட்டன.

மனைநூலும் ஆசிரியரும்

மனை என்னும் சொல்லுக்கு வீடு, இல்லம், மனைவி மனை வாழ்க்கை, இல்வாழ்க்கை, குடும்பம், வெற்றிடம், நற்றாய், இரண்டாயிரத்து நானூறு குழி கொண்ட ஒரு நிலப்பரப்பு,சிற்றில், நில அளவின் வகை, சூதாடு பலகையின் அறை ஆகிய பல பொருள்களை நிகண்டுகளிலும் அகராதிகளிலும் காண்கிறோம். மனையடி சாத்திரம் என்ற நூலுக்குப் பொருள் காண்பது எளிது.68


மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு 69 எனத் தொல்காப்பியரும்,

மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை 70

எனத் திருவள்ளுவரும் மனை என்ற சொல்லை வீடு என்னும் பொருளில் வழங்கியுள்ளார்.

அடி என்னும் சொல்லுக்கு அளவு, காலடி, காற்சுவடி, செய்யுள் உறுப்பிலொன்று என்பன பொருள். இங்கு அளவு என்னும் பொருள் பொருந்துகிறது.