இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தண்பனி நிலவில் தனிநடம் புரிவாள் தளிரில் மலரில் பனியென உறைவாள் கண்துயில் மருவும் பசும்புல் தரையாள் களிகொள் மயில்போல் ஆறெனத் திரிவாள்
-அவளும்
மாலையில் நாணிச் சிவந்திட வருவாள் மருளும் மாலையை மயங்கிடத் தருவாள் சீலையென் றிரவினைத் தாங்கியே திரிவாள் சிரித்திடச் சிரித்திட விந்தைகள் புரிவாள்
-அவளும்
செடிகொடி விரிக்கும் மலர்களிற் சிரிப்பாள் சிதறிய மலர்களிற் பஞ்சணை விரிப்பாள் மிடிகெட உழைக்கும் தோள்களில் இருப்பாள் மேதினி யாவும் மேம்படும் விருப்பாள்
-அவளும் உழுபவன் கலப்பையின் முனைதனில் நடப்பாள் உளிகொளும் சிற்பியின் விரல்களில் நடிப்பாள்
2 இழைகொளும் பாவினில் அபிநயம் பிடிப்பாள்
எழுச்சிகொள் கவிஞனுக் குணர்ச்சியைக் கொடுப்பாள்
- அவளும்
ത കൃ:ef് ി سے بج رہی.29 صلى الله عليه وسلم ۶)
119