பக்கம்:பாடுங்குயில்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் பிறப்பேன் (アーreー アシ入

శిః

அன்று பிறந்தேன் அரைநூற்று மூன்றன்பின் இன்றும் பிறக்கின்றேன் என்தமிழ்க்கு-நன்றுசெய என்றும் பிறப்பேன் இளங்குழந்தை போலிருப்பேன் தொன்று.தமிழ் முப்பால் சுவைத்து.

காலம் அனைத்துங் கலங்காத நெஞ்சுரமும் ஞாலம் வணக்குபுகழ் நற்கவியும்-கோலமுறச் சூழ்ந்திருக்கும் நட்பும் சுடர்க்கொடிநான் பெற்றென்றும்

வாழ்ந்திருக்க ஈவாய் வரம்.

சொல்லும் மொழிக்குள்ளே சூடேற்றித் தீமையெலாம் வெல்லுந் திறமளிக்க வேண்டுமம்மா-நல்ல உலகொன்று காண உளங்கொண்டேன் அன்:ைய் நிலைகொண்டு வந்தென்முன் நில்.

54-ஆவது பிறந்தநாளன்று பாடியது

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடுங்குயில்.pdf/41&oldid=593909" இலிருந்து மீள்விக்கப்பட்டது