இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உன்னை உழைப்பினை நம்பு-யாரோ ஒதிய வேதத்தை நம்பில்ை வம்பு
பொன்னை வளர்த்திடுந் தெம் பு-நாட்டிற்
பூத்துக் குலுங்கிட நாடிக்கி ளம்பு
ஆலைத் தொழில்புரிந் தாலும்-பள்ளி
ஆசிரி யப்பணி ஏற்றிருந் தாலும் சிலைத் தொழில்புரிந் தாலும்-எங்கும்
சீருடன் நின்கடன் ஆற்றுக நாளும்
நாட்டையும் உன்னையுஞ் சேர்த்து-நெஞ்சில்
நாளும் நினைத்தே உழைத்திடு வேர்த்து வீட்டையும் நாட்டையும் பார்த்து-தம்பி
வீறுகொண் டேனழு தோள்களை ஆர்த்து
நான்முகன் உன் மண்டை ஒட்டில்-ஏதோ
நாட்டினன் என்பதை நெஞ்சைவிட் டோட்டில்
ஏன் வறு மைத்துயர் நாட்டில்?-தம்பி
ஏறுமுன் னேறுழைப் பாலுயர் கோட்டில்
7
5