உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டிலே காந்தி கதை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலமுறை சிறையில் அடைத்துவைத்தும் பணிய மறுத்தனர் இந்தியர்கள். உலகமே கண்டு வியந்ததுவே: உத்தமர் காக்தியைப் போற்றியதே. உரிமையைக் காத்திட எட்டாண்டு உறுதியாய் இந்தியர் போரிடவே, இறுதியில் அரசு பணிந்ததுவே. ஏற்பட லாச்சே உடன்பாடு ! உரிமைகள் பற்பல பெற்றனரே, உத்தமர் காந்தி முயற்சியினுல் 1 தருமமே வெற்றி பெற்றதுவே, சாந்த மகானது சக்தியினுல் : தென்னப் பிரிக்காவில் இந்தியர்கள் சேமமாய் இனிமேல் வாழ்ந்திடலாம்' என்னும் இனியதோர் நிலைமையுமே ஏற்பட லானது காந்தியில்ை. அங்கிய நாட்டினில் இந்தியரின் அல்ல8லத் தீர்த்தபின் அண்ணலுமே சொந்தகம் பாரத நாட்டினிலே தொண்டு புரிந்திட ஆசைகொண்டார். 97. 31 35-7