பக்கம்:பாட்டும் கதையும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கும்பிடுவோம்

தந்தை தாயைக் கும்பிடுவோம்

தமிழைத் தாய்போல் வணங்கிடுவோம்

ஆசான் அடியைப் போற்றிடுவோம்

அழகாய்ப் பாடம் கற்றிடுவோம்

பள்ளிக் கூடம் சென்றிடுவோம்

பாட்டும் கதையும் படித்திடுவோம்

துள்ளித் துள்ளி ஆடிடுவோம்

தோட்ட வேலை செய்திடுவோம்

எண்ணும் எழுத்தும் கண்ணாகும்

ஏட்டுக் கல்வி பொன்னாகும்.