பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

57

இந்த இயக்கத்தில் பங்கேற்ற பிறகு, ராஜன் பாபுவுக்குத் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை என்பதே இல்லாமல் போனது. முழு நேரத்தையும் ராஜன் பாபு நாட்டுப் பணியிலேயே செலவிட்டார்.

இந்தக் கிளர்ச்சிக்கு பொதுமக்கள் பேராதரவு தந்தது மட்டுமன்று; இந்த அடக்குமுறை பஞ்சாப் மாநிலத்தில் ராட்சத உருவம் பெற்றது. ரெளலட் சட்டத்தை எதிர்க்க அல்லது கடுமையாகக் கண்டிக்க, பஞ்சாப் அமிர்தசரசில், ஜாலியன் வாலா பாக் என்ற இடத்தில் திரண்டிருந்த மக்கள் மேல் ஜெனரல் டயர் என்ற ஆங்கிலேயன் குண்டுகள் இருந்த வரையில் சுடச் சொன்னான். அதனால்,போலீகம், ராணுவமும் சுட்டன. ஏறக்குறைய ஆயிரக்கணக்கான் மக்கள், சுவர்களைத் தாண்டி ஓடும் போது சுடப்பட்டதால் சுவர் மீதே சாய்ந்து பிணமானார்கள். எத்தனையோ ஆயிரம் பேர் படுகாயமடைந்தார்கள்.

கற்பழிக்கப்பட்ட, மானபங்கம் செய்யப்பட்ட மாதரசிகள் எண்ணற்றவர்கள் ஆவர். இவற்றை எல்லாம் கண்ட மக்கள், நாட்டில் ஆத்திரத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி விட்டார்கள்.

இதற்கு இடையில், ஐரோப்பியப் போரின் விளைவாகத் துருக்கி நாடும் துண்டாடப்பட்டது. இதை எதிர்த்து முஸ்லீம்கள் கிலாபத் இயக்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தார்கள். மகாத்மா காந்தியும், ராஜன் பாபு போன்ற முக்கியத் தலைவர்களும், அதாவது பொது மக்களது சக்தியிலே இரண்டறக் கலந்து ஒன்றிவிட்ட மற்ற தலைவர்களும் இதற்குத் தங்கள் ஆதரவைத் தந்தார்கள். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையாக அறப்போர் இயக்கத்தில் பங்கு பெற்றனர்.

கிலாபத் மாநாடு 1920 ஆம் ஆண்டில், பாட்னா நகரில் ராஜன் பாபு தலைமையில் மிக வெற்றிகரமாக நடைபெற்றது. அவருடைய