இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாரதியின்
அதனையும், சிலப்பதிகாரத்தில் கோக்கப்பட்டுள்ள வரிசையில் மாலையாகக் காணலாம்:
“மணியே எங்கோ” | — | சிலம்பு: | காதை: | 2 அடி: |
“ஒரு மல் மணி” | — | ” | ” | |
“திரு மா மணி” | — | ” | ” | |
“மா மணிக்கொழுந்து” | — | ” | ” | |
“முத்தக மணி” | — | ” | ” | |
“மணியுடை அரி” | — | ” | ” | |
“அணி மணிக் காற்சிலம்பு” | — | ” | ” | |
“தெரித்தது மணி” | — | ” | ” | |
“மணி கண்டு” | — | ” | ” | |
“திருத்தகு மாமணிக் கொழுந்து” | — | ” | ” |
—இவை சிலம்பில் ஆங்காங்கே
ஒளிர்ந்தாலும் இவ்வாறு கோத்துக் காணத்தக்கவை. கோத்த மணிமாலையில் எத்துணை மணிகள் உள்ளன. எண்ணினால் பத்து மணிகள் ஒளிரும். ஒன்பான் மணிமாலை சிறந்ததுதான். அதற்கும் ஒரு தனி மணியாக-தொங்கும். பதக்கம் ஒன்று வேண்டாவா? கண்ணகியார் தமிழப் பெண்களின் கற்புப் பதக்கம் ஆவாள். அவரையும் பதக்கமாக ஒன்பான் மணிமாலையில் இணைத்து ‘பதிண்மணிமாலை’யாகச் சிலப்பதிகாரத்தைக் கொள்ளலாம்.
இப்படி ஒரு பார்வையைப் பாரதியார் சிலப்பதிகார இலக்கியத்தில் ஒட்டியிருக்கலாம்; ஒட்டாமலும் இருக்கலாம்.
மேலே சிலப்பதிகாரத்தில் தொகுக்கப்பட்ட மணி அமைப்புகளை இளங்கோவடிகளார் திட்டமிட்டு அமைத்துள்ளார் என்று உறுதியாகச் சொல்ல இயலாது என்றாலும். அப்படியொரு அருமையான அமைப்பு உள்ளது.
52