பாரதியின்
“மாநிலத் தாயை வணங்குது மென்போம்” என்று கருதினார். ‘மாதரம்’ என்றால் தாய்நாடு வந்தனை-வணங்குதல். சொற்பொருள் சொல்வதுபோன்று உரை வகுத்தார். ஒரு பாடலிலேயே அடுத்தடுத்து அமைந்த இதனை உரை என்னாது வேறு என்னவென்று சொல்வது? வேண்டுமானால் மொழிபெயர்ப்பு என்று சொல்லலாம். மொழிபெயர்ப்பும் ஒரு வகை உரைதான். இதுபோன்று அன்றித் தம் பாடலுக்கு உரைவிளக்கம்போன்று தமது கட்டுரையில் கருத்துகளை வடிக்கும் முறையையும் கையாண்டுள்ளார்.
கட்டுரைகளில் தாம் காட்டும் மேற்கோள் பாடல்களுக்கு இடச் சூழலுக்கு ஏற்ப உரை எழுதும் முறையையும் காணலாம். இவ்வாறு, உரைவகைகள் பலவற்றையும் அவர் கையாண்டுள்ள பாங்கு அவரது இலக்கியப் பார்வையின் செயற்பாடு எனலாம். வகைக்கொன்றையும் காண்பது இக்கருத்துக்குப் பொருந்துவதாகும்.
தமது பாஞ்சாலி சபதப் பாடல்களில் இன்றியமையா இடங்களுக்கு உரைக்குறிப்பை வரைந்துள்ளார். அவர் வரைந்துள்ள முறைப்படியே வருகின்றன:
- “பாட்டு 24-வரி 7: பால்வகை மன்னவர்.
- பால்பகுதி, பல பகுதிகளாக வகுக்கப்பட்ட
- அரசர் கூட்டங்கள்.
- பாட்டு 27-வரி 2:வளமைகள்-(உலக வழக்கு);
- பெருமைகள் என்பது பொருள்.”
- பெருமைகள் என்பது பொருள்.”
64