இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3.
4.
jl8
சொந்த அரசும் புவிச் ககங்களும் மாண்புகளும் அந்தகர்க் குண்டாகுமோ ?-கிளியே அலிகளுக்கின்ப முண்டோ ?
கண்க ளிரண் டிருந்தும் கானுந் திறமை யற்ற
பெண்களின் கூட்டமடீ-கிளியே பேகிப் பய னென்னடி?
யந்திர சாலை யென்பர் எங்கள் துணிக ளென்பர் மந்திரத்தாலே யெங்கும்-கிளியே மாங்கனி வீழ்வதுண்டோ?
உப்பென்றும் சீனி யென்றும் உள்நாட்டுச் சேலை யென்றும் செப்பித் திரிவாரடி-கிளியே செய்வ தறியாரடீ.
தேவியர் மான மென்றும் தெய்வத்தின் பக்தி யென்றும் நாவிற்ை சொல்வதல்லால்-கிளியே நம்புத லற்றாரடீ. மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் பேதைகள் போலுயிரைக்-கிளியே பேணி யிருந்தாரடி.
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய ஆவி பெரிதென் றெண்ணிக்-கிளியே அஞ்சிக் கிடந்தாரடி.