பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 பாரதி தமிழ் ஒளி, தெளிவு, குளிர்ந்த நடை மூன்றும் இருக்கவேண்டுமென்பது கம்பனுடைய மதமாகும். இதுவே நியாயமான கொள்கை. மேலும், நெடுங்காலத்துக்கு முன்னே எழுதப்பட்ட நூல்கள் அக்காலத்து பாஷையைத் தழுவினவை. காலம் மாற மாற, பாஷை மாறிக் கொண்டு போகிறது ; பழைய பதங்கள் மாறிப் புதிய பதங்கள் உண்டாகின்றன. புலவர் அந்த அந்தக் காலத்து ஜனங்களுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய பதங்களையே வழங்க வேண்டும். அருமையான உள்ளக்காட்சிகளை எளிமை கொண்ட நடையிலே எழுதுவது நல்ல கவிதை. ஆனல் சென்ற சில நூற் ருண்டுகளாக, புலவர்களும் சாமியார்களும் சேர்ந்து வெகு ஸ்ாதாரண விஷயங்களே அஸாதாரண அலெளகிக அந்தகார நடையில் எழுதுவதுதான் உயர்ந்த கல்வித் திறமை என்று தீர்மானம் செய்து கொண்டார்கள். இடைக்காலத்து ஸங்கீதம் பாரத தேசத்து ஸங்கீதம் பூமியிலுள்ள எல்லா தேசத்து ஸங்கீதத்தைக் காட்டிலும் மேலானது. கவிதையைப் போலவே ஸங்கீதத்திலும் கவரஸங்களின் தொழில் இருக்க வேண்டும். நவரஸங்களைப் பற்றி இந்தப் பத்திரிகையிலே தனியாக ஒரு வியாஸம் பின் எழுதப்படும். இன்ன இன்ன ராகங்களிலே இன்ன இன்ன சமயங்களில் இன்ன இன்ன ரஸங்கள் தோன்றப் பாடவேண்டு மென்ற விதிகள் எல்லாம் பூர்வகாலத்து நூல் களிலே காணப்படுகின்றன. கீர்த்தனத்திலுள்ள சொற்களின் அர்த்தமும் ராகத்தின் ஒளியும் ரஸத்திலே ஒன்றுபட்டிருக்க வேண்டும். தியாகையர் காலம்வரை நமது தேசத்து ஸங்கீதம் ஒளியுடனிருந்தது. பிறகு இதிலும் இருள் சேரத் தொடங்கி விட்டது. பாட்டிலே ரஸச் சேர்க்கை கிடையாது. அப்படியே சேர்த்தாலும் சோக ரஸம் (கருணு ரஸம்) தான் சேர்ப்பார்கள். மற்றவை மடிந்து போயின, பாட்டுக் கிசைந்தபடி தாளம் என்பது மாறிப் போய், தாளத்துக் கிசைந்தபடி பாட்டாகி விட்டது. இன்பத்தைக் காட்டிலும் கணக்கே பிரதானம் என்று முடிவு செய்து கொண்டார்கள். இன்பமும் கணக்கும் சேர்ந்திருக்க Tத்ெதிரன் பத்திரிகை.