பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பாரதி தமிழ் சிறிது நேரத்துக்குள் புயற்காற்று நின்றது. அங்கே ஒரு தோணி வந்தது, தோணியின் அழகு சொல்ல முடியாது. மயில் முகப்பும், பொன்னிறமும் கொண்டதாய் அன்னம் நீந்திவருவதுபோல மெதுவாக என்னருகில் வந்த அத் தோணியிடையே ஒரு மறக் குமாரன் ஆஸ்னமிட்டு வீற்றிருந்தான். அவன் முகத்திைெளி தீயொளிபோல விளங்கிற்று. தோணியைக் கண்டவுடனே நான் கை கூப்பினேன். அப்போது தோணிக்காரனிடம் என்னே ஏற்றிக் கொள்ளும்படி அவன் கட்டளையிட்டான். அவர்கள் என்னை ஏற்றிக் கொண்டனர். அந்தத் தோணியில் ஏறினவுடனே என் உடம்பிலும், மனதிலுமிருந்த துன்பங்களெல்லாம் நீங்கிப் போயின. என் உடம்பைப் பார்த்தால் ராஜாவுடை தரித்திருக் கிறது. பதினறு வயதுப் பிள்ளையாகவே கானுமிருந்தேன். தோணியிடையிருந்த மன்னன் கரத்தில் வேல் தெரிந்தது. அப்போது கண்ணே விழித்தேன். வேதபுரத்துக் கடற்கரை, மாலை வ்ேளே, மணல்மீது நான் படுத்திருப்பது கண்டேன். கம்பிக்கையுண்டாகவில்லை. கண்ணே கன்ருகத் துடைத்துப் பார்த்தேன். தீவும், புயல்காற்றும், கனவென்று தெரிந்து கொண்டேன். அந்தத் தீவில் என்னேக் கண்டவுடன் ஒடி மறைந்த பெண்ணின் வடிவம் என் கண்முன்னே கிற்பது போலிருந்தது. பிறகு தோணியிலே கண்ட மன்னன் வடிவம் தெரிந்தது. .வீடு வந்து சேர்ந்தேன். வேதபுரத்தில் மெளனசாமியார் என்ருெருவர் இருக்கிருர். அவரிடம் எனது கனவைச் சொல்லி, அந்தத் தீவிலே கண்ட பெண் யாரென்று கேட்டேன். ' உன்னை யார் காப்பாற்றிய தென்பதை நீ அறியவில்லை, அந்தப் பெண் உன்ன்ரிடம் அன்பு கொண்டாள். இரண்டாமுறை தோணியிலே தோன்றிய இளவரசன் கையில் ஒரு வேல் இருந்தது கண்டணையா ? . அதுவே உனக்குப் பெண்ணுகத் தோன் றிற்று. உன்னைக் கவலைக் கடலில் வீழ்த்திய பெண்ணே பிறகு வேலாகத் தோன்றி உன்னைக் காத்தாள் ” என்று சொன்னர். சக்தியே வேலென்றும் அதுவே உயிருக்கு நல்ல துணையென்று தெரிந்து கொண்டேன். சீக்கிரத்தில் நல்ல காள் பார்த்து வேதபுரத்திலுள்ள ஏழைப் பிள்ளையாருக்கு மூவாயி ரத்து முன்னூறு தேங்காய் உடைக்க வேண்டுமென்று தீர்மானம் செய்திருக்கிறேன்.