பாற்கடல்
217
இருந்தது. அதனால் நம்பிக்கையைக் கொண்டாடுகிறீர்கள். அதனாலேயே சாவையும் கொண்டாடுகிறீர்கள். எங்களுக்கு நாளை என்பது இல்லை. ஆகையால் கொண்டாடுவதற்கு உயிரும் இல்லை, சாவும் இல்லை. கொண்டாடுவதற்கு எதுவுமில்லை. பிய்த்துக் கொண்டு போவது ஒன்றைத் தவிர. ஏன் பிறந்தாய்? இறப்பதற்குத்தான் பிறந்தோம். இதற்குள்ளேதான் கராட்டே, Kungfu எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். Elvis Presley பாட்டு பாட வேண்டும். Guitar வாசித்திக் கொண்டே ஆட வேண்டும். ஹஹ் ஹா! சச்சாச்சா சச்சாச்சா - சொடுக்கு விரலை ! ஓடி இடுப்பை ! jug jug, jig jig Whoope ஒரு Valentino என்ன, James Dean என்ன, Bruce Lee என்ன, இவர்களைப் போல் பொட்டென்று போய்விட வேண்டும், அப்போதுதான் என்னைச் சுற்றி ஒரு cult வளரும்.“
எதிர்ப்பதற்கென்றே எதிர்ப்பு என்பதோடல்லாமல், இதுவே ஒரு தத்துவம், இயக்கம், ஏக்கம்!
சரி, முகிலாம்பரி, சோகாபரணம் என்கிற மாதிரி வழக்கில் இல்லாத ராக ப்ரஸ்தாரத்தில் இறங்கிவிட்டு, நேயர்கள் இன்னும் அதிகப்படியான குழப்பத்துக்கும் வேதனைக்கும் ஆளாகுமுன், ரஞ்சகமான ஒரு துரித உருப்படிக்கு நேரம் வந்துவிட்டது என்று எனக்கே தோன்றுகிறது. ஆ!
ஓவியர் ஸுபாவைப் பற்றிக் கொஞ்ச நேரம். எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்.
அந்த நாள், 'அமுதசுரபி'யின் ஆஸ்தான எழுத்தாளனாக நான் விளங்கியபோது, ஸுபாதான் எனக்கு