இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
286
லா. ச. ராமாமிருதம்
ஜன்னல் வழியாகப் பொற்கிரணங்கள் தூலம் பாய்கின்றன.
“ராமாமிருதம்...“
என் முகத்தின் மேல் குனிவது இது என்ன முகம்? சூரியனைவிட வெளிச்சமான முகம்! அந்தக் கண்களில் விளையாடி, கன்னங்களில் வழியும் அந்தக் கருணையை, அந்த ஆசையை, அந்த அன்பை, அந்தப் பாசத்தை, அப்படியே அள்ளித் திங்கணும்போல் இருக்கு. ஆனால் தின்ன முடியாதா?
என்னிக்கும் அம்மா அம்மாதான்.
அதிலும் நீ நீதான்.