பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. புதுவைப் பாவேந்தர் சிலை. ஓர் எச்சரிக்கை ! (புதுவைக் கடற்கரையில் அமைந்திருந்த பாவேந் தரின் சிலையை வேருே.ரிடத்திற்கு மாற்றி வைக்கவும், அந் நினைவுச் சிலையிருந்தவிடத்தில், நேருவின் சிலையை நாட்டவும், புதுவையரசு முனைகையில், கொதித் தெழுதிய உணர்வு கொப்புளிக்கும் அரிய ஆசிரிய வுரை.) - புதுவையில், கடற்கரையில், காந்தி சிலைக்கு நேராக, முன்னர்த் துய்ப்ளேக்சு சிலே இருந்த இருக்கையில், தி.மு.க.ஆளு மையில் உள்ள பொழுது பாவேந்தர் சிலை ஒன்று வைக்கப் பெற்றது. அதனை இப்பொழுது அந்த இடத்திலிருந்து அகற்றி விட்டு, வேருேர் இடத்தில் வைக்கப் போவதாகவும், அந்த இடத்தில் நேரு சிலையை வைக்கப் போவதாகவும், புதுவை நகர மன்றம் திட்டமிட்டுள்ளதாம். பொதுவாகவே வடநாட்டவர்கள் சிலைகளும், தெருப் பெயர்களும் தமிழ்நாட்டில் ஏராளம் ஆனல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்திந்தியப் பெருந் தலைவர்களுக்குக்கூட வடநாடு களில் சிலைகளோ தெருப்பெயர்களோ அறவே இல்லை என் பதை நாம் அனைவரும் அறிதல் வேண்டும். இந்த நிலை ஒன்றே தமிழ் நாட்டவரின் ஏமாளித் தனத்தையும், வடநாட்டவரின் கரவான ஆளுமைத்திறத்தையும் தெளிவாக நாம் அறிந்து கொள்ளப் போதுமான சான்ருகும். இந்த நிலைகளின் தொடர்ச்சியாகவே, இப்பொழுது பாவேந்தர் சிலை யகற்றப் படுவதும், அவ்விடத்தில் நேரு சிலையை வைக்க முயற்சி செய் யப்படுவதும் நடைபெறப் போகின்றதாக நாம் உணர்தல் வேண்டும். இந்த நிலைக்கு இடங் கொடுப்போமால்ை, இனி இந்நாட்டில் தமிழ்த் தலைவர்களின் சிலைகளை வைப்பதற்கே கூடத் தடை வந்தாலும் வரலாம். எனவே, இந்த நிலையில் நம் உரிமையையும் மதிப்பையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டி யது மிகவும் இன்றியமையாத தாகும்.