148
புகழேந்தி நளன் கதை
இசைமுகந்த வாயும் இயல்தெரிந்த நாவும்
திசைமுகந்தால் அன்ன தெருவும் - வசையிறந்த
பொன்னாடு போந்திருந்தாற் போன்றதே
போர்விதர்ப்ப
நன்னாடற் கோமான் தன் நாடு
‘இழப்ப’ என்பது மீண்டும் மீண்டும் வந்து ஒசை இன்பம் தருகிறது.
"வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்ப
பொய்கையும் நீள் கழியும் புள்ளிழப்பப் டையவே
செவ்வாய் அன்றில் துணையிழப்பச்
சென்றடைந்தான்
வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு” (நளவெண்பா)
“பவள வாள் நுதல் திலகம் இழப்பத்
தவள வாள் நகை கோவலன் இழப்ப”
என்று இளங்கோவும் இச்சொல்லை மீண்டும் மீண்டும் ஆளுதல் காண முடிகிறது.
தமிழில் அகப் பொருளில் தலைவன் தலைவியைக் காண்கிறான். இது காட்சி என்னும் துறையை ஒட்டியது. பின்பு இவள் அரமகளோ நரமகளோ என்ற ஐயம் அவன்பால் தோன்றுகிறது. இவள் தெய்வமகள் அல்லள் அகல் இடத்துப் பெண் என்று முடிவு செய்கிறான்.
அதற்காக அவன் காணும் குறிப்புகள், கண் இமைப்பது, கால்கள் தரையில் படுவது, மலர் வாடுவது