62
புகழேந்தி நளன் கதை
இது வியப்பாக இருந்தது. பேசுவதற்காகவா வர வேண்டும். இது தன்னை ஏசுவது போல இருந்தது.
“சூது ஆடுவோம் வா” என்றான்.
வம்புக்கு அழைக்கிறான் என்பது தெரிந்தது. “வம்பை விலைக்கு வாங்க் கூடாது. வந்த வம்பைவிடக் கூடாது” என்ற பழமொழி நினைவுக்கு வந்தது.
“மறுத்தால் அது இழிவாகும்” என்று நினைத்தான்.
வெற்றி தோல்வி அதைப் பற்றி அவன் கவலைப் படவில்லை. இவன் மானத்தை அவன் தூண்டி விட்டது போல் தோன்றியது.
“குது ஆடுவது தீது” என்று மனத்தில் பட்டது.
அவன் கெட்ட காலம்; அதைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்கவில்லை.
“வாழ்க்கையில் தவறுகள் செய்தால்தான் அது சுவையுடையதாக அமையும்” என்று சிந்திக்கத் தொடங்கினான்.
ஆடினால் என்ன? பொருள் இழப்பு ஏற்படலாம்; அதற்காக அவன் அஞ்சவில்லை.
அறிவுரை சொல்லவே ஒருசிலரை அமைச்சர் என்று வைத்திருந்தான். அவர்கள் நல்லது கூறியதால் நல்லமைச்சர்கள் என்று நவிலப்பட்டனர்.
அறிவுரை கூறவே அகராதிகளை அவர்கள் கற்றிருந்தனர். “சூது அதனால் வரும் தீது” என்ற தலைப்பில் நூல்களைப் புரட்டினர். அடுக்கடுக்காகச் சான்றுகள் கிடைத்தன. அவற்றின் தீமைகளை அவனிடம் ஒப்புவித்தனர்.
சூதோடு ஏனைய மயக்கங்களையும் உடன் சேர்த்துக் கூறினர். “காதல் அது தீது” என்று கூறினார்கள். தன் மனைவியை அல்ல; பிற மாதரை விரும்புவது தீது என்று