பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 63

திருஷ்டியை, மானம் என்கிறவைகளுக்கு அவை ஆதாரமாக இருக்கிறபடியினாலே அது மோக்ஷ மார்க்கத்துக்கு வழியாகாது; ஆகவே, இந்தப் பாதையைவிட்டு நீங்கி விதர்சனா பாதையில் செல்வதே நல்வழி என்று அறிந்தார். இவ்வாறு நன்நெறி தீய நெறிகளைக் கண்ட, ஆலோகம் முதலானவைகளிலே மனத்தைச் செலுத்தாமல் விதர்சனா பாவத்திலே மனத்தைச்செலுத்துவது மோ மார்க்கம் என்பதைக் கண்டார்.

இவ்வாறு இவர்கண்ட இதற்கு மார்க்கா மார்க்கா ஞானதர்சன விசுத்தி என்பது பெயர்.

விதர்சன நெறியில் சென்ற போதிசத்துவர், பிறகு அநித்தியம், துக்கம், அனாத்மம், அசுசி என்பவற்றைச் சிந்தித்து ஆராய்ந்து பார்த்தபோது பஞ்ச ஸ்தந்தங்களின் தோற்றத்தையும் அழிவையுங் கண்டார். இதற்கு உதய வியய ஞானம் என்பது பெயர்.

இவ்வாறே போதிசத்துவர் முறையே பஞ்சானு தர்சன ஞானம், பயதோபஸ்தான ஞானம், ஆதீனவ ஞானம், முக்திகாமதா ஞானம், பிரதி சங்க்யானுதர்சன ஞாளம், சம்ஸ்காரரோபேக்ஷா ஞானம் முதலிய ஞானங்களையடைந்தார். பிறகு சத்யானுலோம ஞானம் உண்டாயிற்று. பிறகு, பிருத்தஜ்னா கோத்திராவஸ்தையைக் கடந்து நிர்வாண மோக்ஷத்தைப் பெற்றுக்கொண்டே கோத்ரபூ ஞானம் கிடைக்கப் பெற்றார்.

கோத்ரபூ ஞானம் மனதில் தோன்றி மறையும்போது துக்கத்தைப் பார்த்துக்கொண்டே சமுதாயத்தை நீக்கிக் கொண்டே நிரோதத்தைப் பாவித்து உறுதிப்படுத்திக்கொண்டே மார்க்க சத்தியத்தை அனுசரித்துக் கொண்டே முதலாவது ஞானதரிசனம்பெற்றார். அதாவது ஸ்ரோத பக்தி மார்க்க ஞானம் பெற்றார்.

அதன்பிறகு ஸ்ரோதாபத்தி பலனும் பிறகு மார்க்க ப்ரத்திய பேக்ஷன ஞானமும் பலப்ரத்தியவேக்ஷண ஞானமும் ப்ரஹீனக்லேச ப்ரத்தியவேக்ஷணஞானமும் வத்யக்லே சப்ரத்தியவேக்ஷண ஞானமும் உண்டாயின.

பிறகு மறுபடியும் உதய வியய ஞானத்திலிருந்து சமஸ்காரங்கள் அளித்தம், துக்கம், அனாத்மம் என்று சிந்திக்கும்போது போதிசத்துவருக்கு முன்போலவே சமஸ்காரோ பேக்ஷா ஞானத்தின் கடைசியில், அநுலோம கோத்ரபூ ஞானத்திற்குச் சமீபமாகத் துக்கத்தைக் கண்டுகொண்டே சமுதாய சத்யத்தை நீக்கிக்கொண்டே ராக துவேஷ மோகங்கள் முதலியவற்றைப் பலவீனப்படுத்திக்