பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாவின் ஆசை 211

‘அது எங்கனாச்சும் ஊரை சுத்தப் போயிருக்கும். போற இடம், வர்ற இடம் தெரிய நம்மகிட்டே சொல்லிக் கிட்டாப் போவுது? என்ன தம்பி, ஏதாவது விசயமா?” என்றாள் முனியம்மாள்.

பக்கிரியைப் பற்றிய பேச்சை எடுத்தவுடனே முனியம் மாளின் முகம் போன போக்கை ஹரி கவனித்தான். அதில் பிரதிபலித்த துயரமும் வேதனையும் அவன் மனத்தையும் தொட்டன.

சிங்கப்பூர் மாமா பக்கிரியைச் சிறு வயதில் கண்ணப்ப னாக இருந்தபோது பார்த்திருக்கிறான் ஹரி, எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு ஒரு முறை சமீபத்தில் பார்த்தான். ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து வந்து கொண்டிருந்த தன்னை எப்படியோ அடையாளம் கண்டுகொண்டு பக்கிரியே வலுவில் கூப்பிட்டுப் பேசியதை நினைக்கையில் ஹரிக்கே ஆச்சரியம் தாங்கவில்லை.

ஆனால், முனியம்மாளுக்கோ - அவன் ஒரே தம்பி யாகையால் - பக்கிரியிடம் அளவுக்கு மீறிய வாஞ்சை. பக்கிரியும் எப்போதாவது ஒரு தடவை சிங்கப்பூரிலிருந்து இந்தப் பக்கம் வருகிறவர்கள் வசம் அக்காவுக்கென்று அருமையான சிங்கப்பூர் வாசனைச் சோப்பு இரண்டை வாங்கி அனுப்புவான். அதைப் பூசிக்கொண்டு, தன் தம்பிக்குத் தன் மீது எத்தனை அன்பு, எத்தனை பாசம் என்று ஊர் முழுக்ம்ப் பறை சாற்றி மகிழ்ந்து போவாள். “சிங்கப்பூரிலே தம்பி பெரிய உத்தியோகம் பாக்குது. கைநிறையச் சம்பாரிச்சுக்கிட்டு வரும். அதுக்கு நம்ப பக்கத் திலே நவ்ல பெண்ணாப் பார்த்துக் கட்டி வைக்கணும்’ என்று, வருவோர் போவோரிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள்

இப்போது ஊரோடு வந்துவிட்ட பக்கிரியைப் பார்த்த வுடனே அவன் அங்கே என்ன உத்தியோகம் பார்த்திருக்க