பக்கம்:புல்லின் இதழ்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 புல்லின் இதழ்கள்

றையும் தின்று விட்டதா? எதற்கும் பார்த்து விட்டு வருவோம்’ என்றாள்.

- சரி அம்மா என்று காயத்திரியும் எழுந்தாள். இந்தச் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த ஹரிக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது. பசுவின் அலறலுக்குக் காரணம் பக்கிரி கொல்லையில் வந்திருப் பதுதான் என்பது ஹரிக்கு நன்றாக விளங்கியது. நாய் செய்கிற வேளையை இந்தப் பசு செய்து மானத்தை வாங்கி விடும்போல் இருக்கிறதே! என்று அவன் கவலைப் பட்டுக் கொண்டிருந்த போதே காயத்திரி லட்சுமியம் மாளுடன் தூக்கக் கலக்கத்தோடு புழக்கடைப் பக்கம் ஹரிக் கேன் லைட்டுடன் போனாள்.

ஹரியின் இருதயம் வேகமாக அடித்துக் கொண் டிருந்தது.